பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. எட்டாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வந்த இப்பயிற்சி பயிலரங்கத்தில் பள்ளி மாண-மாணவியர்கள் பலர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
கடந்த 2-ந்தேதி துவங்கிய இப்பயிற்சி வகுப்புகள் முடிவடைந்து கௌஸ் பள்ளி வாசலில் இப்பயிற்சிக்காக தேர்வுகளும் நடைபெற்றன.
தேர்வில் வெற்றி பெற்ற மற்றும் கலந்துக் கொண்ட மாணவ-மாணவிகளுக்கு இன்று பரிசுகளும் வழங்ப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் திருக்குர்ஆனை எப்படி முறைப்படி தஜ்வீதுடன் ஓதுவது, இஸ்லாமிய கொள்ளை விளக்கம், தொழுகை, ஹதீஸ் கலை, துஆக்கள் மனனம் போன்றவை இடம்பெற்றதுடன், உலமாக்களில் சொற்பொழிவுகளும் நடைபெற்றன.
Photos: CWO
No comments:
Post a Comment